புதுச்சேரி : புதுச்சேரியில் வைத்திக்குப்பம் உள்ளிட்ட 3 கிராம மொத்த மீன் வியாபாரிகள் வெளிமாநிலத்தில் இருந்து மீன்களை மொத்தமாக வாங்கி வந்து காந்தி வீதி- நேரு வீதி சந்திப்பில் வியாபாரம் செய்தனர். இதேபோல் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக மொத்த மீன் வியாபாரிகள் நேருவீதியில் பெரிய மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு மீன்களை விற்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. மேலும் லாஸ்பேட்டை இசிஆர் சாலைக்கு சென்று சில்லரை மீன் வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து மீன்களை வாங்கி வந்து பெரிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தது. இதுதொடர்பாக சீனியர் எஸ்பி தலைமையில் மீன் மொத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் நவீன மீன் அங்காடிக்கு செல்ல வேண்டுமென போலீஸ் தரப்பிலும் உறுதிபட கூறப்பட்டது. மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மொத்த மீன் வியாபாரிகள் இருதரப்பினரும் வழக்கமான இடத்துக்கு நேற்று மீன்களை வாகனங்களில் எடுத்துவரவில்லை. இதனால் அங்கு கூடைகளுடன் வந்திருந்த சில்லரை வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றமடைந்தனர்.அசம்பாவிதத்தை தடுக்க இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் (ெபரியகடை), கீர்த்திவர்மன் (டிராபிக்) தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் விரக்தியடைந்த மீன் வியாபாரிகள் அங்காடியில் காலி மீன்கூடைகளுடன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மொத்த வியாபாரிகளும் மீன் வியாபாரத்தை புறக்கணித்தனர். பெரிய மார்க்கெட்டுக்கு மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் ஊர்வலமாக சென்று அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து, முறையிட்டனர். பஞ்சாயத்தார் சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், தர்ணா, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் குதிக்கலாம் என்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது….
The post புதுச்சேரி நகராட்சியை கண்டித்து பெரிய மார்க்கெட் மொத்த, சில்லரை மீன் வியாபாரிகள் திடீர் போராட்டம்-போலீஸ் குவிப்பு-பதற்றம் appeared first on Dinakaran.